ஆந்திர மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், உணவு தேடி வந்த 4 காட்டு யானைகள் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.
ஒடிசா வனப்பகுதியிலிருந்து வந்த 6 காட்டு யானைகள், ஆந்திர மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் உள்ள கிராமங்களில் உணவு தேடி சுற்றித் திரிந்துள்ளன. இந்த நிலையில் அங்கு வந்த யானைகள் கூட்டம், இன்று காலை விவசாய விளைநிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.